உள்ளூர் செய்திகள்
- சிறப்பான முறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி படைத்தளபதி வெங்கடேசனுக்கு பணி நிறைவு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மஹாலில் ஊர் காவல் படை தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி கவுசிக் தேவ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சங்கு முன்னிலை வகித்தார். ஊர்க்காவல் படை சேலம் மண்டல கூடுதல் தலைவர் மகா அஜய் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி படைத்தளபதி வெங்கடேசனுக்கு பணி நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் இன்ஸ்பெக்டர்கள் குலசேகரன், பிரகாஷ், ஊர்க்காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உதவி தளபதி மணிகண்டன், ஊர் காவல் படை வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.