உள்ளூர் செய்திகள்

போலீஸ் குடியிருப்பில் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டிபட்டியில் சுகாதார விழிப்புணர்வு!

Published On 2023-03-27 05:47 GMT   |   Update On 2023-03-27 05:47 GMT
பேரூராட்சி தலைவர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி போலீஸ் குடியிருப்பில் திடக்கழிவு மற்றும் மக்கும் கழிவு மக்காத கழிவு ஆகிய குப்பைகளை தரம் பிரித்து வழங்க ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் (பொறுப்பு) செயல் அலுவலர் சண்முகம், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள், வார்டு கவுன்சிலர் சின்னன், மஸ்தூர் யூனியன் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News