உள்ளூர் செய்திகள்
அரூரில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை
- தீர்த்தமலை, ஆண்டியூர், மொண்டுக்குளி பகுதிகளில் ஆலங்கட்டி மலையும் பெய்தது.
- கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.
தருமபுரி,
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்காங்கே மழை பெய்தது. பின்னர் வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தீர்த்தமலை, ஆண்டியூர், மொண்டுக்குளி பகுதிகளில் ஆலங்கட்டி மலையும் பெய்தது. இதனால் கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் சேதமடைந்தது.