உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் செய்த மாணவர்களை படத்தில் காணலாம். 

வேப்பூர் அருகே அரசுபள்ளியில் குடிநீர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் மறியல்

Published On 2022-07-14 07:53 GMT   |   Update On 2022-07-14 07:53 GMT
  • வேப்பூர் அருகே அரசுபள்ளியில் குடிநீர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர்

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவதுகுடி பகுதியில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பள்ளிக்கு குடிநீர் வராத காரணத்தால் பள்ளி மாணவர்கள் மாணவிகள் இன்று காலை சுமார் 9 மணி முதல் 9. 30 வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர் இதனால் சுமார் அரைமணி நேரம் சென்னை திருச்சி மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சா லையில் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News