உள்ளூர் செய்திகள்

சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கமலவல்லி தாயார்.

யோக நரசிங்கப்பெருமாள் கோவிலில் பவுர்ணமி வழிபாடு

Published On 2023-07-03 09:52 GMT   |   Update On 2023-07-03 09:52 GMT
பவுர்ணமி அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லத்தில் யோக நரசிங்கப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பக்தர்கள் குழந்தை பேறு வேண்டி பிரதி பவுர்ணமி தோறும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குழந்தை வரம் தரும் அம்மனை பிரதி வெள்ளி கிழமை மற்றும் பவுர்ணமி அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட கிரக தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் இன்று ஆனி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு கமலவல்லி தாயாருக்கு சிறப்பு பாலாபிஷேகம், அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கமலவல்லி தாயாருக்கு மங்கள வாழ்வு தரும் மஞ்சள் காப்பு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News