உள்ளூர் செய்திகள்

கடையநல்லூரில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2023-07-21 08:50 GMT   |   Update On 2023-07-21 08:50 GMT
  • விழாவில் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
  • 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

கடையநல்லூர்:

தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில், பள்ளியின் தாளாளர் பட்டத்து சாஹிப் ஹஸன்மக்தூம் ஆலிம் சாகிப் தலைமையில் நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சிக்கந்தர் ரஹிமான் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளியின் தாளாளருடன் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடந்து 86 மாணவர்களுக்கும், 92 மாணவிகளுக்கும் தமிழ்நாடு அரசு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர்மன்ற உறுப்பினர்கள் முகமதுஅலி , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர்மன்ற உறுப்பினர் நிலோபர் அப்பாஸ், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முகமதுபுகாரி, முன்னாள் பட்டதாரி ஆசிரியர் உதுமான், தி.மு.க. நகர தகவல் தொழில்நுட்ப அணி ஜாஹிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News