உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன பெண் ஊழியர் மாயம்

Published On 2023-05-01 08:16 GMT   |   Update On 2023-05-01 08:16 GMT
  • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.
  • ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள கூத்தாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சினேகா. இவர் ராயக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திருப்பிய அவர் இரவு வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் பெற்றோர் எழுந்து பார்த்த போது மகள் சினேகா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News