உள்ளூர் செய்திகள்

ஈஸ்டர் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

Published On 2023-04-08 09:06 GMT   |   Update On 2023-04-08 09:06 GMT
  • ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது
  • தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

சென்னை:

உலகில் அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த ஏசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஈஸ்டர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தொழில் அதிபர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News