உள்ளூர் செய்திகள்

பல்லடம் பகுதியில் ஆடுகளை கடித்துக்கொல்லும் நாய்கள் - பொதுமக்கள் அச்சம்

Published On 2023-02-08 05:21 GMT   |   Update On 2023-02-08 05:21 GMT
  • நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும்,1 பசுமாட்டையும், கடித்துக் கொன்றுள்ளன.

பல்லடம் :

பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் நாய்கள் கடித்து சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்ததாகவும், நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்லடம் பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சித்ரா என்பவர் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கொடுத்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- விவசாய நிலத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறோம். தற்பொழுது அதுதான் குடும்ப வருமானத்திற்கு உதவி செய்கிறது.

இந்த நிலையில் கிராமத்தில் சுற்றி திரியும் நாய்கள், ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன. இதுவரை எங்கள் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளையும்,1 பசுமாட்டையும், கடித்துக் கொன்றுள்ளன.

கால்நடைகளை நம்பி வாழ்ந்து வரும் எங்களுக்கு இழப்பீடு வழங்கவும், கால்நடைகளை, நாய்கள் கடிக்காமல் இருக்கவும், நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News