உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட காட்சி.

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி- கடையநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-12-17 08:40 GMT   |   Update On 2022-12-17 08:40 GMT
  • மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
  • 10-ம் வகுப்பு மாணவர் கற்பக மணி பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் 2-வது இடம் பெற்றார் .

கடையநல்லூர்:

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன. போட்டிகளில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் பரதன் பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் முதலிடத்தையும், இதே மாணவர் காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் கற்பக மணி அண்ணா பிறந்த தின பேச்சு போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றார் .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நெல்லை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரி ஷீலா ஜெபரூபி முதல் பரிசாக ரூ.5000 மற்றும் சான்றிதழும், இரண்டாம் பரிசாக தலா ரூ.3000-ம் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்.

பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் மங்களத்துரை, உதவி தலைமை ஆசிரியர் ராஜன், முதுகலை தமிழாசிரியர் சண்முகசுந்தரம், தமிழாசிரியர் மாரியப்பன், முதுகலை வரலாற்று ஆசிரியர் பசும்பொன் ராஜா, 8-ம் வகுப்பு தமிழாசிரியர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.

Tags:    

Similar News