உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்- ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-09-03 10:23 GMT   |   Update On 2023-09-03 10:23 GMT
  • கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
  • பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பூந்தமல்லி:

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பூந்தமல்லி ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் சீ.காந்திமதி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, வி.கன்னியப்பன், பி.டில்லிகுமார், கே.சுரேஷ்குமார், யமுனா ரமேஷ், உமாமகேஸ்வரி சங்கர், பிரியா செல்வம், ஜெயஸ்ரீ லோகநாதன், பத்மாவதி கண்ணன், சத்ய பிரியா முரளி கிருஷ்ணன், சிவகாமி சுரேஷ், கே.ஜி.டி.கௌதமன், எம்.கண்ணன் மற்றும் அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட நசரத்பேட்டை, அகரமேல், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள், தார் சாலைகள் அமைப்பது. பழுதடைந்த அரசு கட்டடங்களை சீரமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News