உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் மான் வேட்டையாடியவர் கைது
- குண்டுப்பட்டி பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- குண்டுப்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்தது தெரியவந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி பகுதியில் மான் வேட்டையாடி, இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது குண்டுப்பட்டி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் மான் வேட்டையாடி இறைச்சியை சமைத்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து கடமான் இறைச்சியை பறிமுதல் செய்தனர். அவர் வேறு ஏதேனும் விலங்குகளை வேட்டையாடி உள்ளாரா என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.