உள்ளூர் செய்திகள்

மரங்கள் வளர்ந்து பச்சை பசலென காட்சியளிக்கும் பனமரத்துப்பட்டி ஏரி.

சேலம் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பனமரத்துப்பட்டி ஏரிைய சீரமைக்க முடிவு

Published On 2022-06-19 07:06 GMT   |   Update On 2022-06-19 07:06 GMT
சேலம் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய பனமரத்துப்பட்டி ஏரிைய சீரமைகும் பணி தொடங்கப்பட்டது.

சேலம்:

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911-ம் ஆண்டு ரூ.9.68 லட்சம் மதிப்பில் பனமரத்துப்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் சேலம் மாநகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக தீர்த்து வைத்த பெருமை இந்த ஏரிக்கு உண்டு. 1924-ம் ஆண்டு சேலம் மாநகருக்கென மேட்டூர் தனிக்குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டது.

அதேநேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் தலமாக இருந்த பனமரத்துப்பட்டி ஏரியில் சினிமா படப்பிடிப்புகள் தொடர்ந்து நடந்தது. எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., ெஜயசங்கர், விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த பல திரைப்படங்கள் இங்கே படமானது குறிப்பிடத்தக்கது.

இப்படி சிறப்பு வாய்ந்த பனமரத்துப்பட்டி ஏரி 2137.92 ஏக்கர் பரப்பளவும், 168 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்த ஏரி தற்போது வரை சேலம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் ஏரிக்கு நீர்வரத்து இன்றி கருவேல மரங்கள் மற்றும் இதர வகை மரங்கள் அதிகளவில் காணப்படுகிறது. தமிழக அரசு, இந்த ஏரியை பராமரிக்காததால் கருவேல மரங்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளன.

இதனிடையே பனம–ரத்துப்பட்டி ஏரியின் நீரை, சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு குடிநீராக வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார். இதையடுத்து அவர் பனமரத்துப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மழைக்காலங்களில் ஜருகுமலை, போதமலை, வரட்டாறு, கூட்டாறு ஆகிய பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஏரியில் 800 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் கருவேல மரங்களை அகற்றும் வகையில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதனை ரூ.1.84 கோடிக்கு கருவேல மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ள சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கான ஒப்புதல் உள்ளிட்ட பணிகள் முடிவ–டைந்ததும், விரைவில் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News