உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

ராகுல் காந்தி கைதை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-27 07:16 GMT   |   Update On 2022-07-27 07:16 GMT
  • ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.
  • காங்கிரசார் பலர் கலந்து கொண்டனர்.

குள்ளனம்பட்டி:

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் சோனியாவிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய ராகுல்காந்தி கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.

இதில் மாநில பொதுச் செயலாளர் ஜெயமீனா முருகானந்தம், மாநில செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மற்றும் நத்தம் தொகுதி தலைவர் சுடர்வண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News