உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

வத்தலக்குண்டுவில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-06 07:55 GMT   |   Update On 2022-08-06 07:55 GMT
  • வத்தலக்குண்டுவில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டனர்.

வத்தலக்குண்டு:

விலைவாசி உயர்வவை குறைக்க வேண்டும். அமலாக்கத்துறை மூலம் காங்கிரஸ் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வத்தலக்குண்டுவில் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் காமாட்சி தலைமை வகித்தார்.

காங்கிரஸ் நகர தலைவர்அப்துல் அஜீஸ்,மாநில செயற்குழு உறுப்பினர் கோபால்,மாவட்ட நிர்வாகி அஜிஸ்,மாநில மகிளா காங்கிரஸ் செயலாளர்ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பட்டிவீரன்பட்டி நகர செயலாளர் பிரசன்னா, தம்பி,மகாதேவன், சேவுகம்பட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர்நாகராஜ்,வட்டார பொதுச் செயலாளர் பாஸ்கரன்,வத்தலகுண்டு வட்டார அவைத்தலைவர் ராஜா,செயலாளர் கணேசன்,நிர்வாகி பழனிமுத்து உள்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News