உள்ளூர் செய்திகள்
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
இதில் கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், வேங்கைராஜா, ஒழுங்கு நடவடிக்கை குழு முகமது சித்திக், துணை தலைவர் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர் பாரதி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரோஜாம்மாள், காங்கிரஸ் கட்சியின் மண்டலத் தலைவர் அப்பாஸ் மந்திரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.