உள்ளூர் செய்திகள்

திருவேற்காடு அருகே தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2022-11-01 11:54 IST   |   Update On 2022-11-01 11:54:00 IST
  • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பூந்தமல்லி:

திருவேற்காடு அடுத்த சுந்தரசோழபுரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண்(வயது20). இவர் ஆவடியை அடுத்த பட்டாபி ராமில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருணின் தாய் குடும்ப பிரச்சினையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் வருண் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். தாயின் நினைவால் சரியாக தூங்காமலும், சாப்பிடாமலும் இருந்து வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தாய் இறந்த சோகத்தில் இருந்த வருண் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது திடீரென தாயின் புடவையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து வருணின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தாய் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News