உள்ளூர் செய்திகள்
கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் அனுசரிப்பு
- தரும்புரியில் கிருஸ்துவர்களின் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
- கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்கள் மரணம் அடைகிறபோது பொது வாக கல்லறைகளில் அடக்கம் செய்யப் படுகின்றனர். கல்லறை களுக்குச் சென்று அவர்களை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாள், சகல ஆத்துமாக்களின் திருநாள் என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினத்தையொட்டி தருமபுரி சந்தை ப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் கல்ல றைகளை கழுவி, பூக்களால் அலங்க ரித்து, மெழுகுவர்த்தி, ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி, ஜெபப் புத்தகத்தை படித்து, பாடல்களைப் பாடி, பின்னர் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்தனர்.