உள்ளூர் செய்திகள்

காவிரி நீரை தமிழகம் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

Published On 2023-08-15 09:57 GMT   |   Update On 2023-08-15 09:57 GMT
  • தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கிருஷ்ணகிரி, 

தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சிவசாமியின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமையில், சிவசாமியின் படத்திற்கு மலர் தூவி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைவர் ராமகவுண்டர் பேசும் போது தமிழக அரசு கடந்த காலங்களில் கர்நாடகா அரசுடன் பேசி, காவிரியில் இருந்து தண்ணீரை விடுவிக்க வைத்து காய்ந்து போன நெல் பயிர்களை காப்பாற்றுவதற்கான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், நட்பு ரீதியில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகா முதல் மந்திரியுடன் பேசி தண்ணீரை விடுவிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

அதே போல், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணிஒட்டு என்னும் இடத்தில் தடுப்பணைக்கட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஆயிரம் ஹெக்டருக்கு மேல் பாசனம் பெறுகின்ற வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் நிர்வாகிகள் ராஜா, பெருமாள், அசோக்குமார், வேலு, வரதராஜ், நசீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனுமந்த ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News