உள்ளூர் செய்திகள்

நீடூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது.

நீடூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் தேரோட்டம்

Published On 2023-05-15 10:04 GMT   |   Update On 2023-05-15 10:04 GMT
  • அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
  • 4 வீதிகளை சுற்றுவந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை தாலுகா, நீடூர் சோமநாதர் சுவாமி கோயிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்பாள் கோயிலில் சித்திரை மாத தேர் திருவிழா நடைபெற்றது.

தொடர்ந்து 27-ஆம் தேதி காப்பு கட்டுதல், மே 2-ஆம் தேதி பால்குடம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்றது.

உற்சவத்தின் சிகர விழாவான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் எழுந்தருளச் செய்யப்ப ட்டார்.

பின்னர், மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டு ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் தேரை இழுத்தனர்.

முஸ்லிம், கிரிஸ்டன், இந்து வசிக்கும் கோயிலின் நான்கு வீதிகளைச் சுற்றுவந்து மீண்டும் நிலையை அடைந்தது.

வழியெங்கும் பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன்பு அம்பாளுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.

மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் வீட்டின் முன்பு அம்பாளுக்கு மலர் சாற்றி, தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

இது மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக விளங்கியது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழா நிகழ்ச்சி ஏற்பாடு களை நீடூர் கிராமவாசிகள் செய்திருந்தனர்

Tags:    

Similar News