உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வடமதுரை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2022-09-09 06:52 GMT   |   Update On 2022-09-09 06:52 GMT
  • திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பெண்ணிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள் செயினை பறித்துச்சென்றனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

வடமதுரை:

மணப்பாறை அருகே கண்ணுடையான் பட்டியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 50). தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

மோர்பட்டி அருகே வந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதில் தனலட்சுமி காயமடைந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News