உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர் மீது வழக்கு

Published On 2023-06-29 08:42 GMT   |   Update On 2023-06-29 08:42 GMT
  • மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
  • சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது42). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து தனியார் மருத்துவமனை நடத்தி வருவதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் அரூர் அரசு மருத்துவ அலுவலர் அருண்பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்திரசேகரன் மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News