உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட புள்ளிமானை படத்தில் காணலாம்.

வாகனத்தில் அடிபட்டு கிடந்த புள்ளிமானை மீட்ட சிறுவர்கள்

Published On 2022-06-16 09:16 GMT   |   Update On 2022-06-16 09:16 GMT
வாகனத்தில் அடிபட்டு கிடந்த புள்ளிமானை மீட்ட சிறுவர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வாழப்பாடி:

வாழப்பாடியைச் சேர்ந்த ஆங்கில மருந்துக்கடை உரிமையாளர் முகமது இப்ராகிம். இவரது மகன்கள் ஷிஃபாக் அஹ்மத், அல்ஃபார் அஹ்மத் சிறுவர்களான இருவரும், 2 நாட்களுக்கு முன், பெற்றோருடன் காரில் நாமக்கல் பகுதியில் திருமணத்திற்கு சென்றனர்.

நாமக்கல் சுங்கச்சாவடி அடுத்த வேலக வுண்டம்பட்டி அருகே நெடு ஞ்சாலையில் சென்று கொண்டி ருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்து சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் குட்டி ஓன்று அவ்வழியாக சென்ற வாகனம் மோதியதில் கால்கள் முறிந்து படுகாயமடைந்த நிலையில் சாலையிலேயே கிடந்துள்ளது.

இதனைக் கண்ட சிறுவர்கள் இருவரும், காரை நிறுத்தி புள்ளிமானை மீட்டு அவ்வழியாக சென்ற 108 அவரச சிகிச்சை வாகனத்தில் இருந்து மருந்துகளை கொண்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

புள்ளிமானை பெற்றுக்கொண்ட வனத்துறையினர் சிறுவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். புள்ளிமானை நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றனர்.

Tags:    

Similar News