ஊத்துக்குளி கதித்தமலை கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
- மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூசதிருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ந் தேதி காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி கீழ் தேரோட்டம் நடைபெற்றது. 6-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் 7-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம், மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.