உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் -29-ம் தேதி நடக்கிறது

Published On 2022-10-27 15:13 IST   |   Update On 2022-10-27 15:13:00 IST
  • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ம் தேதி நடக்கிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: -

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 29-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.

இப்பணியிடங்கள் முழுமையாக பெண் மனுதாரர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதற்கான கல்வித்தகுதியாக 2020, 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 18 வயது முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், உடற்தகுதியாக உயரம் 150 செ.மீட்டரும், எடை 40 கிலோ இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாத சம்பளமாக ரூ.16,557-ம், உணவு, தங்கும் இடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். இதில், எஸ்சி, எஸ்டி மனுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தகுதியுடைய பெண் பணிநாடுநர்கள் தங்களு டைய 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவை அசல் மற்றும் நகல்களு டன், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News