உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி விழிப்புணர்வு முகாம்

Published On 2022-11-11 15:02 IST   |   Update On 2022-11-11 15:02:00 IST
  • சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • பேச்சுப் போட்டியும்,கட்டுரைப் போட்டியும் மாணவர்க ளுக்கு இடையே நடை பெற்றது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் முதல்வர் .தனபால் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி தலைவர் மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற மன்றத்தின் நீதிபதி வேல்முருகன் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி சிறப்பு மாவட்ட நீதிபதி மற்றும் மோட்டார் வாகன தீர்ப்பாயம் நீதிபதி அமுதா ,கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர்கள் கருணா கரன், சபி சபிக் அகமது ,மாவட்ட உரிமையியல் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா, செயலாளர் தலைமை குற்றவியல் நீதிபதி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ராஜசிம்மவர்மன், கிருஷ்ணகிரி முதன்மை சார்பு நீதிபதி கே .ஆர். லீலா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சட்டத்துறை விழிப்பு ணர் விழாவில் சுதந்திர இந்தியாவில் சட்டத்துறை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த பேச்சுப் போட்டியும்,கட்டுரைப் போட்டியும் மாணவர்க ளுக்கு இடையே நடை பெற்றது.

வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ஜெகன், இராமமூர்த்தி, ஸ்டீபன் விக்டர் ஆண்டனி ஏற்பாடு செய்திருந்தனர். மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சுரேஷ்குமார் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

விழாவின் நிறைவாக கிருஷ்ணகிரி மாவட்ட தன்னார்வலர் இயக்குநர் ஜலாலுதீன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News