உள்ளூர் செய்திகள்

சமூக நீதி நாள் உறுதிமொழி

Published On 2022-09-18 06:34 GMT   |   Update On 2022-09-18 06:34 GMT
  • சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
  • பெரியார் பிறந்த நாள் விழா

அரியலூர்:

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பெரியார் பிறந்த நாள் விழா நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையிலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி தலைமையிலும் அனைத்து துறை அலுவலர்கள், ஊழியர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதேபோல் மாவட்டங்களில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் போலீசாரால் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

Similar News