உள்ளூர் செய்திகள்

மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கிவைத்த பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2022-08-28 15:09 IST   |   Update On 2022-08-28 15:09:00 IST
  • மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கிவைத்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நடத்திய விசாரணையில், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன்(வயது 45) என்பவர், விற்பனைக்காக சாக்கு மூட்டையில் 49 குவார்ட்டர் பாட்டில்களை கொண்டு வந்து, குண்டவெளி பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணனின் மனைவி சூர்யா என்ற சிலம்பொலியிடம்(24) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை மீன்சுருட்டி போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News