மருத்துவ ஊழியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்
- விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
- விண்ணப்பங்கள் பெறும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு, வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆதரவு ஊழியர் பணிநியமனம் செய்ய விண்ணப்பங்கள் 27.1.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
24.1.2023 நாளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அரசாணை எண்.26-ல் மேற்படி பணிகளுக்கான பணிவிவரம் மற்றும் பணி பொறுப்புகள் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிநியமனம் செய்ய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு, வருகிற 6-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஏற்கெனவே, விண்ணப்பம் சமர்ப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பங்களை செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், செங்கல்பட்டு அலுவலத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு (https://chengalpattu.nic.in-ல் பார்க்கவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.