உள்ளூர் செய்திகள்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
- தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்தடுப்பூசி போடப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி நாசுவம்பாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு வடுகபாளையம் புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் புனிதா சரவணன் தலைமை வகித்தார்.
கால்நடை பராமரிப்புத் துறை திருப்பூர் கோட்ட உதவி இயக்குநர் (பொறுப்பு)டாக்டர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் 92 கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்தடுப்பூசி,20 நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசி,191கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசியும் போடப்பட்டது.
மேலும் 26 கால்நடைகளுக்கு மருத்துவ உதவி,5 ஆடுகளுக்கு ஆண்மை நீக்கம், 10 செயற்கை முறை கருவூட்டல்,15 கருவுற்றல் ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.இதில் கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.