உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள்.

சாத்தான்குளம் சிவனைந்தபெருமாள் சுவாமி கோவிலில் ஆவணி கொடைவிழா

Published On 2022-09-20 07:27 GMT   |   Update On 2022-09-20 07:27 GMT
  • கொடைவிழாவையொட்டி காலை 9மணிக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
  • 12மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம் சிவனைந்த பெருமாள் சுவாமி கோவிலில் ஆவணி கொடை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 9மணிக்கு கலுங்காவுடையார் சாஸ்தா, வெற்றி விநாயகர், சுந்தராட்சி அம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12மணிக்கு கணபதி ஹோமம், கும்பம் ஏற்றுதல், தீபாராதனை, மாலை 6மணிக்கு சிவன் பூஜை, தீபாராதனை, 6.30மணிக்கு கன்னியை அழைத்து வழிபடுதல், தொடர்ந்து காவடி பிறை முருகன் கோவிலில் இருந்து நேமிசம், பால்குடம் எடுத்து வருதல், இரவு 7மணிக்கு பெண்கள் பொங்கலிடுதல், இரவு 9மணிக்கு சாஸ்தா அழைப்பு. 10மணிக்கு அலங்கார தீபாராதனை, 12மணிக்கு படப்புடன் கூடிய சாமக்கொடை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News