உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் திருட முயன்ற வாலிபர் கைது

Published On 2022-09-19 10:56 IST   |   Update On 2022-09-19 10:56:00 IST
  • தனியார் ரைஸ் மில் வளாகத்தில் தண்ணீர் இறக்க பயன்படுத்தி வந்த மோட்டாரை மர்ம நபர் திருடிச் செல்ல முயன்றார்.
  • மின் மோட்டாரை திருட முயன்றதும் தெரியவந்தது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே பெருவங்கூர் சாலையில் தனியார் ரைஸ் மில் வளாகத்தில் தண்ணீர் இறக்க பயன்படுத்தி வந்த மோட்டாரை மர்ம நபர் திருடிச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த தனியார் மில் மேலாளர் வெங்கடேசன் என்பவர் அந்த மர்ம நபரை பிடித்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் மர்ம நபரை விசாரித்த போது அவர் தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 33) என்பதும், அவர் மின் மோட்டாரை திருட முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News