உள்ளூர் செய்திகள்

தந்தை இறந்த துயரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய வாலிபர்

Published On 2023-01-01 15:13 IST   |   Update On 2023-01-01 15:13:00 IST
  • தந்தை இறந்தது முதலே மனமுடைந்த நிலையில் கிரி இருந்து வந்துள்ளார்.
  • தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிரியை தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இந்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிரி (எ) கரிய கவுடா (வயது 25).

இவரது தந்தை மல்லப்பா கடந்த 25 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். தந்தை இறந்தது முதலே மனமுடைந்த நிலையில் கிரி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 30-ந்தேதி அன்று வீட்டை விட்டு சென்ற கிரி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அவர் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து கிரியின் உறவினர் முனிகவுடா என்பவர் கொடுத்த புகாரின்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கிரியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News