உள்ளூர் செய்திகள்

குன்னூா் பஸ் நிலையத்துக்குள் நுழைந்த காட்டெருமை

Published On 2023-05-18 09:16 GMT   |   Update On 2023-05-18 09:16 GMT
  • குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
  • வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது.

குன்னூர்

நீலகிரி மாவட்டம், குன்னூரை சுற்றிய வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலவி வருவது வாடிக்கை.

இந்நிலையில், வனத்தைவிட்டு வெளியேறிய காட்டெருமை குன்னூா் பேருந்து நிலையத்துக்குள் புதன்கிழமை காலை நுழைந்தது. வாகனங்கள் சப்தத்தால் எருமை அங்குமிங்கும் ஓடியது. இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ்களில் ஏறி அமா்ந்து கொண்டனா்.

சிறிது நேரம் உலவிய காட்டெருமை பிறகு தானாகவே வனப் பகுதிக்குள் சென்றது.

குடியிருப்பு பகுதிகளில் உலவி வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News