உள்ளூர் செய்திகள்

வானூர் அருகே 9 மாத கர்ப்பிணிபெண் திடீர் சாவு

Published On 2022-11-11 07:51 GMT   |   Update On 2022-11-11 07:51 GMT
  • சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் கருத்தரிக்க ராஜகுமாரி சிகிச்சை பெற்று வந்தார்.
  • நேற்று இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். விவசாயி. அவரது மணைவி ராஜகுமாரி (வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. குழந்தைகள் இல்லை. எனவே சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் கருத்தரித்து ராஜகுமாரி சிகிச்சை பெற்று வந்தார். அதன்படி அவர் கர்ப்பமானார். தற்போது ராஜகுமாரி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று இரவு ராஜகுமாரிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தமிழரசன் தனது மனைவியை வானூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி இறந்தார். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மூச்சுத்திணறல் காரணமாக ராஜகுமாரி இறந்துள்ளார். அவரது வயிற்றில் 2 குழந்தைகள் இருந்தது. அதுவும் இறந்துபோனது என தெரிவித்தனர். இதுகுறித்து வானூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News