உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே அனுமதியின்றி மண் அள்ளி சென்ற டிராக்டர்கள் பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2022-08-03 09:39 GMT   |   Update On 2022-08-03 09:39 GMT
  • ஆய்வுபணி மேற்கொண்டு இருந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா தடுத்து நிறுத்தினார்.
  • பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 டிராக்டர்களையும் பறிமுதல்

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தில் இருந்து உரிய அனுமதி பெறாமல் மண் கடத்தி சென்ற 4 டிராக்டர்களை ஆய்வுபணி மேற்கொண்டு இருந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளா தடுத்து நிறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் குறும்பலாப்பேரியை சேர்ந்த அமல்ராஜ்(வயது 56), அம்பை மன்னார்கோவிலை சேர்ந்த பிரகாஷ்(23), வெள்ளக்கால் பகுதியை சேர்ந்த யோகேஷ்(20), மணிகண்டன்(21 )ஆகியோரை கைது செய்தனர். 

Tags:    

Similar News