உள்ளூர் செய்திகள்
சாலையில் பாலை ஊற்றி ஆர்ப்பாட்டம்
வைத்தீஸ்வரன் கோவில் அருகே சாலையில் பாலை ஊற்றி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர் சங்கத்தின் மூலமாக வைத்தியநாதபுரம், கொண்டத்தூர், கதிராம ங்கலம், பாகசாலை உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பசும்பாலை ஆவின் நிர்வாகம் கொள்மு தல் செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக பால் கொள்முதல் செய்வதற்கான தொகையை வழங்காமல் உற்பத்தியாளர்களை அலைக்கழித்து வருவதா கவும், இதுகுறித்து வைத்தீ ஸ்வரன்கோவில் ஆவின் பால் நிர்வாகத்திடம் வைத்தியநாதபுரம் மக்கள் கேட்டதால் தங்கள் பகுதியில் கறந்த பசும்பாலை கொள்முதல் செய்யாமல் பால் கொள்முதலை நிறுத்தி விட்டனராம்.
இதனால் சுமார் 200 லிட்டர் பால் வீணாகி விட்டதாக கூறி ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆவின் பால் நிர்வாகிகளை கண்டித்து வைத்தியநாதபுரம் சாலையில் பாலை ஊற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.