உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கடமலைக்குண்டுவில் சூதாட்ட கும்பல் கைது

Published On 2022-05-23 05:26 GMT   |   Update On 2022-05-23 05:26 GMT
கடமலைக்குண்டுவில் பணம் வைத்து சூதாடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்
வருசநாடு:

கடமலைக்குண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கரட்டுப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். அப்போது தனபாலன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு கும்பல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்த சீனிவாசன், மாடசாமி, நரிமுருகன், வீரபாண்டி, கருப்புசாமி, ஈஸ்வரன், அண்ணாத்துரை, ராமர், பெருமாள், கண்ணன், சுருளிவேல் உள்பட 12 பேர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.48630 பணத்தையும் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News