உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ராணிப்பேட்டை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் கொன்னம்மா குட்டைத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 34) கூலித் தொழிலாளி. இவருக்கு துர்கா என்ற மனைவியும் 9 வயது மகளும் 5 வயது மகனும் உள்ளனர்.
சந்தோஷ் கடந்த 6 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குடும்பத்தினர் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை மோசமானதால் மனமுடைந்த சந்தோஷ் அவரது வீட்டின் உள் பக்கமாக தாழ்பாள் போட்டு கொண்டு கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சந்தோஷின் மனைவி துர்கா ராணிப்பேட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜான் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.