உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய தஞ்சாவூர்

Published On 2022-04-23 16:34 IST   |   Update On 2022-04-23 16:34:00 IST
தஞ்சாவூரில் கொரோனா பரவத் துவங்கியது முதல் தற்போது தான் முதன் முறையாக தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்று பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்திற்கு வந்தது.

கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து கடந்த 4 மாதங்களாக 10க்கும் குறைவாக பதிவாகி வந்தது.

இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான பட்டியலில் தஞ்சையில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.

கொரோனா பரவத் துவங்கியது முதல் தற்போது தான் முதன் முறையாக தினசரி பாதிப்பு பூஜ்ஜியம் என்று பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News