உள்ளூர் செய்திகள்
மதுரை அருகே கோவில் நிதியில் இருந்து கையாடல் செய்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
கருப்பாயூரணி வடக்கு தெருவை சேர்ந்த வீரபாண்டி பூசாரிய மனைவி ஆர்த்தி. இவர் மாட்டுதாவணி போலீஸ்நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், “பாண்டிகோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சனா, சரவணபாண்டி மற்றும் அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி ஆகிய 3பேரும் கோவிலுக்கு சொந்தமான நிதியில் ரூ. 2.5 லட்சம் கையாடல் செய்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள்மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார்மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன்அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.