உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

பள்ளப்பட்டியில் தி.மு.க. உள்கட்சி தேர்தல்

Published On 2022-04-23 15:40 IST   |   Update On 2022-04-23 15:40:00 IST
பள்ளப்பட்டியில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றது.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வின் 15வது பொதுத்தேர்தல் நேற்று தொடங்கியது. வரும் 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டி, புகழூர், குளித்தலை ஆகிய  3 நகராட்சிகள் அரவக்குறிச்சி, தோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம்,  பழையஜெயங்கொண்டம், மருதூர், நங்கவரம் ஆகிய 8 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

பள்ளப்பட்டி நகர தி.மு.க .அலுவலகத்தில் கட்சியின் தலைமை தேர்தல் ஆணையர் ஆர்.ராசாஅருண்மொழி தலைமை செயற்குழு உறுப்பினர் காலனி செந்தில், விருதுநகர் தொண்டர் அணி அமைப்பாளர் எஸ்.கருப்பழகு,

விருதுநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் கே.சமுத்திரம், கரூர் மாவட்ட மாணவரணி அணி அமைப்பாளர் எம்.அன்பழகன் ஆகியோர் தலைமையிலும், நகரச்செயலாளர் தோட்டம் பஷீர்அகமது முன்னிலையில் வேட்பு மனு நேற்று வழங்கப்பட்டது. நிர்வாகி பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

Similar News