உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ரெயிலில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

Published On 2022-04-23 10:03 GMT   |   Update On 2022-04-23 10:03 GMT
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 49 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி:

கொல்கத்தாவில் ஹவுரா என்னும் ஊரிலிருந்து ஹவரா எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு இன்று அதிகாலை வந்துகொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அரியலூர் அருகே நின்ற அந்த ரெயிலில் ஏறி சோதனை நடத்தினார்கள்.

அப்போது சுமார் 50 கிலோ மதிக்கத்தக்க குட்கா பான் மசாலா பொருட்கள்  சிக்கியது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் ரயில் நிலையத்தில் அதிகாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News