உள்ளூர் செய்திகள்
கைது

கொடைக்கானல் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Published On 2022-04-23 05:14 GMT   |   Update On 2022-04-23 05:14 GMT
கொடைக்கானல் அருகே கஞ்சா செடி வளர்த்தவரை கைது செய்த போலீசார் அவர் வளர்த்த கஞ்சா செடிகளை அழித்தனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பள்ளங்கி அருகே கோம்பை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த ரகசியத்தகவலை அடுத்து கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி (வயது 65) என்பவர் தோட்டத்துப் பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் வளர்த்த கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தனர்.



Tags:    

Similar News