உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேக விழா

மரக்காணத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கும்பாபிஷேக விழா- பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்

Published On 2022-04-22 10:40 GMT   |   Update On 2022-04-22 10:40 GMT
கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா ஆராதனை செய்யப்பட்டது.
மரக்காணம்:

மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார்.

கடந்த 20-ந் தேதி ஆரம்பித்த மூன்று கால வேள்வி பூஜை நேற்று காலை 4.30 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது.

நேற்று காலை 10 மணிக்கு பங்காரு அடிகளார் கோபுர கலசத்திற்கு வேள்வியில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட கலசத்தில் இருந்த புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்தார். தொடர்ச்சியாக பல்வேறு திருஷ்டிகள் செய்யப்பட்டது.

பின்னர் சக்தி கொடியை கோபுர கலசத்தில் பங்காரு அடிகளார் பொருத்தினார். அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா ஆராதனை செய்யப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

Tags:    

Similar News