உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அரசு ஐடிஐயில் குறுகியகால திறன் பயிற்சிகள்

Published On 2022-04-22 16:03 IST   |   Update On 2022-04-22 16:03:00 IST
திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் குறுகியகால திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
திருச்சி:

திருவெறும்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய காலத்திறன் பயிற்சி  வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

டர்னிங் மற்றும் டேட்டா என்டரி ஆபரேட்டர் ஆகிய குறுகிய கால திறன் பயிற்சி பெறும் அனைவருக்கும் மத்திய அரசின் தொழில் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.  

பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது அசல் சான்றிதழ்களுடன் பயிற்சி நிலையத்துக்குநேரில் வந்து சேர்ந்து பயன் பெறலாம்.

இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.


Similar News