உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

ஆசிரமத்தில் நகை திருட்டு

Published On 2022-04-22 07:58 GMT   |   Update On 2022-04-22 07:58 GMT
ஆசிரமத்தில் நகை திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

 கரூர் வெண்ணெய்மலையில் உள்ளது ஸ்ரீசபரிசன் சித்தாஸ்ரமம். இதன் நிறுவனர் ஸ்ரீபொன்  பாண்டுரங்க சுவாமிகள் (வயது 76). இவர் கடந்த சம்பவத்தன்று இரவு அவரது படுக்கையறையில் உறங்கியுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் பாண்டுரங்க சுவாமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News