உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் ராமர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் தினமும் உற்சவ பூஜைகள், கட்டளைதாரர் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒரு கட்டமாக ராமர், சீதா தேவியின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று பஜனை பாடல்கள் பாடினார்கள். குழந்தைகளுக்கு ராமர், சீதா, லட்சுமணர், விஸ்வாமித்திரர் வேடங்கள் போட்டவாறு கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.