உள்ளூர் செய்திகள்
பெண்ணை திருமணம் செய்து குடும்ப நடத்த மறுத்த வாலிபர் கைது
தஞ்சையில் பெண்ணை திருமணம் செய்துவிட்டு குடும்ப நடத்த மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை பள்ளியக்ர-ஹா-ரத்தை சேர்ந்தவர் மனோகர். இவரது மகள் பூர்ணிமா (27). மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கழனிவாசலை சேர்ந்தவர் விஜயசாரதி (22). இவர் பள்ளியக்கரஹாரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.
அப்போது பூர்ணிமாவுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. அப்போது பத்தியசாரதி நமது திருமணத்திற்கு எனது பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் நாம் முதலில் திருமணம் செய்து கொள்வோம். பின்னர் நான் பெற்றோரிடம் சம்மதம் வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து கடந்த மார்ச் 23-ந் தேதி விஜயசாரதிக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. 1 மாதம் குடும்பம் நடத்திய விஜயசாரதி பின்னர் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி செல்வதாக கூறி சொந்த ஊருக்கு சென்றார்.
அதன் பின் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பூர்ணிமா செல்போனில் தொடர்பு கொண்டு முடிய-வில்லை.
இதுபற்றி அவர் தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் செய்து குடும்பம் நடத்த மறுத்த விஜயசாரதியை கைது செய்தனர்.
மேலும் விஜயசாரதி பெற்றோர் சந்திரசேகர், கலா மற்றும் உறவினர் முருகேசன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.