உள்ளூர் செய்திகள்
கைது

விழுப்புரத்தில் பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-04-21 10:25 GMT   |   Update On 2022-04-21 10:25 GMT
விழுப்புரத்தில் தொடர்ந்து கள்ளசாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கள்ளசாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மரக்காணத்தை சேர்ந்த கர்ணகி (வயது 38).

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதா பரிந்துரையின் பேரில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் ஆணைக்கிணங்க தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பெரியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News